அறிகுறிகள்:
- கண் வலி.
- கண் எரிச்சல்.
- மங்கலான பார்வை.
- கரிசலாங்கண்ணி சாறு
- பொன்னாங்கண்ணி சாறு
- கீழாநெல்லி சாறு
- சோற்றுக்கற்றாழை
- எள் எண்ணெய்
- விளக்கெண்ணெய்
- நெய்.
- வெள்ளை மிளகு
- சந்தனக்கட்டை
- வெட்டி வேர்
- பசும்பால்
- இளநீர்
- கரிசலாங்கண்ணியை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவற்றின் வேரை நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
- சோற்றுக்கற்றாழை தோல் நீக்கி சோற்றை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- ஒரு மண் பானையில் எள் எண்ணெயை ஊற்றி சூடேறியதும் விளக்கெண்ணெய் ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அனைத்து சாறுகளையும் ஊற்றி மூடி வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எடுத்து ஆற வைக்க வேண்டும்.
- பிறகு வெள்ளை மிளகை உடைத்து 200 மி.லி பசும்பாலில் 1 மணி நேரம் ஊற வைத்து அதே பாலை கொண்டு மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
- சந்தனக்கட்டையை மாவாக இடித்து 200 மி.லி இளநீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
- வெட்டி வேரை இடித்து தைல பானையில் போட வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
- காலையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.
- இந்த தைலத்தை தேய்த்து வரும் நாட்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். தயிர், இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.
கற்றாழை[
No comments:
Post a Comment