அறிகுறிகள்:
- சளி.
- மூக்கடைப்பு.
- வேங்கைப்பட்டை
- சீந்தில்தண்டு.
- வில்வ வேர்
- சிற்றுமுட்டி வேர்.
- நல்லெண்ணெய்
- அமுக்குரா வேர்
- சாதிக்காய்
- தக்கோலம்.
- சண்பகப்பூ.
- விலாமிச்சம் வேர்.
- வெட்டி வேர்.
- பால்
- தாழம் பூ மடல்.
- புனுகு
- குங்குமப்பூ.
- பச்சை கற்பூரம்.
வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து 8 மரக்கால் தண்ணீரில் போட்டு 12 நாளில் 1/8 ஆக வற்றும்படி தீபம் போல் எரித்து வடித்து அதில் நல்லெண்ணெய் 1 படி விட்டு அமுக்குரா வேர் பட்டை 3 பலம், சாதிக்காய், தக்கோலம், சண்பகப்பூ, விலாமிச்சம் வேர், வெட்டி வேர் வகைக்கு 1 வராகன் எடை பசும்பாலில் அரைத்துப் போட்டு அன்றாடம் ஒவ்வொரு தாழம் பூ மடலையும் போட்டு 5 நாள் வரையில் காய்ச்சி வடித்து அதில் புனுகு, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் வகைக்கு 1 வராகன் எடை பொடித்துப் போட்டு வைத்துக்கொண்டு நாசியில் நசியம் செய்து தலையில் தேய்த்து தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.
No comments:
Post a Comment