அகில் கட்டையை தண்ணீரில் சுண்டக் காய்ச்சி வடிகட்டி பசும்பால், நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி அதிமதுரம் தூள் தான்றிக்காய் தூள் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி தடவ தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தீராத தலைவலி.
- அகில் கட்டை
- பால்
- நல்லெண்ணெய்
- அதிமதுரம்
- தான்றிக்காய் தூள்
அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து,ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி சுண்டும் நேரம் அதிமதுரம் தூள் 30 கிராம், தான்றிக்காய் தூள் 30 கிராம் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தடவி வந்தால் தலைவலி குறையும்
No comments:
Post a Comment