அறிகுறிகள்:
- மூக்கடைப்பு.
- மூக்கெரிச்சல்.
- திப்பிலி = 50 கிராம்
- கஸ்தூரி மஞ்சள் = 25 கிராம்
- சந்தனம் = 25 கிராம்
- படிகாரம் = 5 கிராம்
- திப்பிலியை மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து கொள்ளவும்.
- கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து வைத்து கொள்ளவும்.
- சந்தனத்தை உரைத்து கொள்ளவும். படிகாரத்தை சிறிது இளநீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- அரைத்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கூட்டி மீண்டும் அரைத்து உருண்டைகளாக செய்து மண் தட்டில் வைத்து நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் மாவு போல இடித்து சலித்து கொள்ளவும்.
- இந்த மருந்தை துணியில் சிறிய முடிச்சாக கட்டி முகர்ந்து பார்க்கவும். முடிச்சாக கட்டாமலும் சிறிது மருந்தை கையில் எடுத்து முகர்ந்து பார்க்கலாம். இவ்வாறு தொடர்ந்து இந்த மருந்தை முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment