தேவையான பொருட்கள்:
- மணத்தக்காளிக் கீரை – ஒரு கைப்பிடி
- வெங்காயம் – ஒரு ரூபாய் எடை
- வெந்தயம்- இரண்டு எடை
- ஏல அரிசி – ஐந்து காசு எடை
- மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
- வெந்தயம், ஏல அரிசி ஆகியவற்றை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும்.
- இப்போது வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இதனை மேலே சொன்ன கலவையிலே போடவேண்டும்.
- வெங்காயம் சிவந்து வரும் வேளையில் தனியே வதக்கி எடுத்து வைத்திருக்கக் கூடிய மணத்தக்காளிக் கீரையுடன் போட வேண்டும்.
- இப்பொழுது எல்லாவற்றையும் ஒனறாக கலந்து கிளற வேண்டும். இதில் இரண்டு ஆழாக்குத் தண்ணீரை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்தக் கஷாயத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
- காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும்.
- வாய் துர்நாற்றம்.
No comments:
Post a Comment