அறிகுறிகள்:
- மூக்கில் சதை வளர்தல்.
- மூச்சி விடுவதற்கு சிரமமாக இருத்தல்.
- தும்மல்.
- சளி.
- இருமல்
- சிற்றாமுட்டி வேர்.
- சீந்தில் கொடி
- வில்வ வேர்.
- வேங்கை மரத்தின் வைரம்.
- அதிமதுரம்.
- கடுக்காய் தோல்
- சுக்கு.
- தான்றிக்காய் தோல்.
- நெல்லி முள்ளி.
- பசும் பால்.
- நல்லெண்ணெய்.
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி முக்கால் லிட்டராகச் சுண்ட வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதிமதுரம், கடுக்காய் தோல், சுக்கு, தான்றிக்காய் தோல், நெல்லி முள்ளி ஆகியவற்றை அரைத்து வடிக்கட்டிய காஷயத்துடன் கலந்து ஒரு லிட்டர் சுத்தமான பசுவின் பாலும், ஒரு லிட்டர் நல்லெண்யையும் அதனுடன் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். கஷாயம் மணல் பதத்திற்கு வந்ததும் வடிகட்டி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கில் சதை வளர்தல், தும்மல், இருமல், காதுவலி, காதில் சீழ் வருதல் ஆகிய நோய்கள் குறையும்.
No comments:
Post a Comment