யாழ் சமையல்

Subscribe:

Wednesday 6 February 2013

தலைக்கனம் குறைய - கருந்துளசி , சுக்கு

கருந்துளசி

தூய நீரை கொதிக்க வைத்து கொதி வந்ததும் சுக்கு தூளையும், கருந்துளசியையும் போட்டு மூடி வைத்து பிறகு இறக்கி இளஞ்சூட்டுடன் முகத்தை கழுவி வந்தால் தலைக்கனம் குறையும். 

அறிகுறிகள்:

  • தலையில் நீரேற்றம்
  • தலைவலி
தேவையான பொருள்கள்:

  1. சுக்கு
  2. கருந்துளசி
செய்முறை:

10 கிராம் அளவு சுக்கை எடுத்து தோல் நீக்கி இடித்து கொள்ளவும். சம அளவு கருந்துளசி எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் அரை லிட்டர் தூய நீர் விட்டு பின் கொதிக்க வைத்து கொதி வந்ததும் சுக்கு தூளையும், கருந்துளசியையும் போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கி தாங்கும் அளவு இளஞ்சூட்டுடன் முகத்தை காலை, மாலை 3 நாட்கள் கழுவி வந்தால் தலைக்கனம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter