செய்முறை:
சிறிது செம்பருத்தி பூவை எடுத்து அதை அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு
அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக மைய அரைத்து தினமும் காலை சாப்பிட்டு
வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.
செய்முறை:
சிறிதளவு வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ, வெங்காயம், மற்றும் தயிர்
இவைகளை உணவிலோ அல்லது தனியாகவும் சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன்
காணப்படும்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத
வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான
நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதை கண் மை ஆக
உபயோகிக்க இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து
முகப்பொலிவு உண்டாகும்.
செய்முறை:
கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம் எடுத்து வெண்ணெய் போல்
அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் சாப்பிட முகம்
பொலிவு பெறும்.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சள்,விரலிமஞ்சள்,சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து
நன்றாக அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம்
பொலிவுறும்.
செய்முறை:
பன்னீர் ரோஜா 200 கிராம், வசம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 200கிராம்,
புனுகு பட்டை 50 கிராம், கடலை பருப்பு 100 கிராம், பாசிபருப்பு 100
கிராம்,மற்றும் பூலங்கிழங்கு 100 கிராம் இவைகளை பொடி செய்து உபயோகித்தால்
முகம் பளபளக்கும்.
செய்முறை :
முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து
முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு
உண்டாகும்.
செய்முறை:
நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தில் சிறிது மஞ்சள் பொடியையும், கடலை
மாவையும் கலந்து நன்கு குழைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற
வைத்து பின் இளம் வென்னீரில் கழுவி வர, முகம் பளபளக்கும்.
செய்முறை:
சோற்றுக்கற்றாழை இலையுடன் பப்பாளி கூழ் ஒரு டீஸ்பூன் கலந்து கழுத்தில்
இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து,காய்ந்ததும்
தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை செய்து வர முகத்தில் கருவளையம்
குறையும்.