தேவையான பொருட்கள்:
- உலர்ந்த மகிழம் பூ பொடி.
- கிச்சிலி கிழங்கு பொடி.
- கஸ்தூரி மஞ்சள் பொடி.
- கோரை கிழங்கு பொடி.
- சந்தனத் தூள்.
- பன்னீர்.
- பால்.
உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம் கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம் கோரை கிழங்கு பொடி 100 கிராம் உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் பளபளக்கும்.
No comments:
Post a Comment