அறிகுறிகள்:
அறிகுறிகள்:
அறிகுறிகள்:
- தொண்டைப்புண்.
தேவையான பொருள்கள்:
- அதிமதுரம் = 25 கிராம்
- மிளகு = 25 கிராம்
- சுக்கு = 25 கிராம்
- திப்பிலி = 100 கிராம்
- இந்துப்பு = 5 கிராம்
செய்முறை:
அதிமதுரத்தை தட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி எலுமிச்சை பழச்சாறை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
திப்பிலி மற்றும் மிளகை தனித்தனியாக சுத்தம் செய்து கொண்டு மண் பத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை ஊற்றி இளம் வறுவலாக் வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும்.
பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து இடித்து சலித்து இந்துப்பை நன்றாக பொடியாக்கி கலந்து கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு மண் தட்டால் மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து பத்திரப்படுத்தி சாப்பிட்டு வரவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு 1 மணி நேரம் முன் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும். மாலை 6 மணிக்கும் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இவ்வாறு 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிட்டு வரும் போது குளிர்ந்த பானங்கள், இளநீர், தயிர், பழஞ்சோறு, இறைச்சி வகைகள், குளிர்ந்த நீர் ஆகியவற்றை தவிர்க்கவும்.
வெந்நீர் குளியல் மற்றும் வெந்நீர் குடிப்பது சிறந்தது.
No comments:
Post a Comment