அறிகுறிகள்:
- தலைவலி.
- ஒற்றைத் தலைவலி.
- கண் சம்பந்தமான நோய்கள்.
தேவையான பொருட்கள்:
- பொன்னாங்கண்ணி சாறு
- சிறுகீரை சாறு
- ஆவாரைகொழுந்து சாறு
- நெய்
- கிராம்பு
- மரமஞ்சள்.
- ஏலரிசி.
- வால்மிளகு.
- கோஷ்டம்.
- மிளகு
- செண்பகப்பூ.
- அதிமதுரம்
- தேவதாரம்.
- ஜாதிக்காய்
- வெட்டிவேர்
- சந்தனம்
- அரத்தை
- சிற்றாமணக்கு எண்ணெய்
- நல்லெண்ணெய்
செய்முறை:
பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய்
ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி, வால்மிளகு,
கோஷ்டம் மிளகு, செண்பகப்பூ, அதிமதுரம், தேவதாரம், ஜாதிக்காய், வெட்டிவேர்,
சந்தனம், அரத்தை இவைகளை எல்லாம் சிறிதளவு எடுத்து தட்டி போட்டு,
சிற்றாமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சமஅளவு விட்டு சிவக்க
காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குறையும்.