யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label கண்வலி. Show all posts
Showing posts with label கண்வலி. Show all posts

Sunday, 10 February 2013

கண் நோய் நீங்க- நெல்லிக் கனி

நெல்லிக் கனி 

அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்ணில் நீர் வடிதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. நெல்லிக் கனி
செய்முறை:

நெல்லிக் கனியை சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

கண் நோய் போக - அகத்திக் கீரை

அகத்திக் கீரை 
அறிகுறிகள்:
  1. கண்ணில் நீர் வடிதல்.
  2. கண் வலி.
  3. கண் பார்வை குறைவு.
தேவையானப் பொருள்கள்:
  1. அகத்திக் கீரை
செய்முறை:

அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடிசாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

கண்நோய் குணமாக- அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழம் 
அறிகுறிகள்:
  1. கண் வீங்குதல்.
  2. கண் எரிச்சல்.
  3. கண் வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. அன்னாசிப் பழம்
செய்முறை:

கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால்  குணமாகும்.

கண்வலி குறைய - முட்டை , படிகாரம்

முட்டை
அறிகுறிகள் :
  1. கண்வலி.
தேவையான பொருட்கள்:
  1. முட்டை
  2. படிகாரம்.
செய்முறை :

முட்டையின் வெள்ளைக்கருவில், 10 கிராம் படிக்காரத் தூளை போட்டுக் கரைத்து அதை வெள்ளத்துணியில் நனைத்துக் கண்ணின் மேல் வைக்க கண்வலி குறையும்.

கண் நோய்கள் குறைய- வில்வ இலை

வில்வ இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
  1. வில்வ மரத்தின் இளந்தளிர்
செய்முறை:

வில்வ மரத்தின் இளந்தளிரை வதக்கி கண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண்வலி குறைய - துளசி

துளசி 
அறிகுறிகள்:
  1. அதிக சூட்டினால் கண் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. துளசி இலை
செய்முறை:

துளசி இலையை சாறு எடுத்து அந்த சாற்றினை கண்ணின் மேல் தினமும் தடவி வர கண்வலி குறையும்.

கண்வலி குறைய - சீரகம் , ந‌ல்லெண்ணெய்

சீரகம்
அறிகுறிகள்:

  1. கண்ணில் நீர் வடிதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. சீரகம் தூள்
  2. ந‌ல்லெண்ணெய்
செய்முறை:

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை எடுத்து தூள் செய்து ந‌ல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர கண்வலி குறையும்.

கண் வலி குறைய - பொன்னாங்கண்ணிக் கீரை , கீழாநெல்லி இலை , மூக்கரட்டை

மூக்கரட்டை 
அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. மூக்கரட்டைஇலை.
  2. பொன்னாங்கண்ணிகீரை.
  3. கீழாநெல்லிஇலை.
செய்முறை:

மூக்கரட்டை இலை,பொன்னாங்கண்ணிக் கீரை,கீழாநெல்லி  இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட கண் வலி குறையும்.

கண் எரிச்சல் குறைய - திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலை
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. திருநீற்றுப் பச்சிலை.
செய்முறை:

திருநீற்றுப் பச்சைஇலை சாற்றை கண்ணின் மேல் தடவ கண் எரிச்சல் குறையும்.

கண் எரிச்சல் குறைய - பொன்னாங்கண்ணி , நல்லெண்ணெய் , பால்

பொன்னாங்கண்ணி
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
  3. கண்வலி.
தேவையான பொருட்கள் :
  1. பொன்னாங்கண்ணி
  2. நல்லெண்ணெய்
  3. பால்
  4. மிளகு
செய்முறை 

ஒரு டம்ளர் பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு 10 கிராம் போட்டு நன்றாகச் சிவக்கக் காய்ச்சி காய்ந்த பின் பிழிந்து எடுத்து வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.

கண் நோய்கள் குறைய - பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள்

பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் 
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள்.
செய்முறை:

பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் எடுத்து ந‌ன்றாக‌க் கொதிக்க‌ வைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண் நோய்கள் குறை - கருவேல மரம் , சீரகம்

கருவேல மரம்

அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலங்கொழுந்து
  2. சீரகம்
செய்முறை



கருவேலங் கொழுந்தை எடுத்து  சீரகத்தை சேர்த்து அரைத்து கண்ணில் கட்டினால் கண் நோய்கள் குறையும்.

கண் குளிச்சி அடைய - கருவக் கொழுந்து , சீர‌கம்

கருவக் கொழுந்து 

அறிகுறிகள்:
  1. அதிக சூட்டினால் கண் எரிச்சல்.
  2. கண்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. சீரகம்
  2. கருவக் கொழுந்து.
செய்முறை:

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன் மேல் துணி வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டால் கண் குளிச்சி அடையும்.

கண் கட்டி குறைய - புளியம்பூ,பொன்னாங்காணி வேர் ,சிறுகீரை வேர்


பொன்னாங்காணி வேர் 

அறிகுறிகள்:
  1. கண் வீக்கம்.
  2. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. சிறுகீரை வேர்
  2. பொன்னாங்காணி வேர்
  3. புளியம்பூ
  4. திப்பிலி
  5. எலுமிச்சம்பழம்
செய்முறை:

30 கிராம் சிறுகீரை வேர், 30 கிராம் பொன்னாங்காணி வேர், 30 கிராம் புளியம்பூ, 30 கிராம் திப்பிலி ஆகியவற்றை எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து மாத்திரை போல் உருட்டி காய வைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து கண் கட்டியின் மீது போட்டால் கண் கட்டி குறையும்.

கண் கட்டி குறைய - திருநீற்று பச்சிலை ,சங்கு

சங்கு 

அறிகுறிகள் :
  1. கண் வலி.
  2. கண் வீக்கம்.
தேவையான பொருட்கள் :
  1. திருநீற்று பச்சிலை.
  2. சங்கு.
செய்முறை :

திருநீற்று பச்சிலையைச் சாற்றில் சங்கைநன்றாக உறைத்து பூசினால் கண் கட்டி குறையும்.

கண் வலி குறைய - பருப்பு , தேங்காய்

தேங்காய்

அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. பருப்பு
  2. தேங்காய் துருவல்
செய்முறை:

100 கிராம் பருப்பை  வேகவைத்து அத்துடன்  தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.

கண் நோய் குறைய - அவரைக்காய்

அவரைக்காய் 

அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. கண்வலி.
தேவையானப்    பொருட்கள் :
  1. அவரைப்பிஞ்சு
செய்முறை :

விதை முற்றாத அவரை பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் குறையும்.

கண் நோய்கள் குறைய - மஞ்சள்பொடி

மஞ்சள் 

அறிகுறிகள்:
  1. கண் நோய்கள் உண்டாதல்.
தேவையானப் பொருட்கள்:
  1. மஞ்சள்.
  2. துணி.
செய்முறை:

மஞ்சளை நீரில் கலக்கி  ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து, பின் வெயிலில் அதை காய வைத்து கண்களை துடைத்து வந்தால் கண் நோய்கள் வராது.

Saturday, 9 February 2013

கண்நோய்கள் குறைய - எள்செடி , எள்செடியின் பூ , எள்செடியின் பூ

எள்செடியின் பூ 

அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் நோய்கள்.
தேவையானப் பொருட்கள்:
  1. எள்செடியின் பூ
செய்முறை:

எள் செடியின் பூவை நன்கு சுத்தம் செய்து, சாப்பிட்டு வர கண்நோய்கள் குறையும்

கண்நோய்கள்வராமல் தடுக்க - அறுகம்புல் , மிளகு , சீரகம்

அறுகம்புல்

அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் எரிச்சல்.
  3. கண் பார்வை குறைவு.
தேவையானப் பொருட்கள்:
  1. அறுகம்புல்
  2. மிளகு
  3. சீரகம்
  4. நல்லெண்ணெய்
செய்முறை:

அறுகம்புல்  சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து  தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.
Flag Counter