செய்முறை:
படர் தாமரை உள்ள இடத்தை சுத்தம் செய்து 10 துளசி இலையை 5 துளி எலுமிச்சம்
பழச்சாறு விட்டு அரைத்து கனமாக படர் தாமரை உள்ள இடத்தில் பூசினால் படர்
தாமரை குறையும்.
செய்முறை :
வசம்பு 5 கிராம் மஞ்சள் 5 கிராம் சுக்கு 5 கிராம் சித்தரத்தை 5
கிராம் எடுத்துப் பொடித்து வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில்
பூசி வந்தால் கணுக்கால் கட்டி குறையும்.
செய்முறை :
எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து
அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின்
மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.
செய்முறை:
மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில்
பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல்
குறையும்.