யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label தலைவலி. Show all posts
Showing posts with label தலைவலி. Show all posts

Saturday, 9 February 2013

தலைவலி - குப்பைமேனி இலை

குப்பைமேனி பூ

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

அறிகுறி:
  1. தீராத தலைவலி.
  2. பயணத்தின் போது தலைவலி.
  3. வேலையின் போது தலைவலி.
  4. சிந்தனையின் போது தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. குப்பைமேனி இலை மற்றும் பூ – 1 கப்.
  2. தண்ணீர்.
செய்முறை:

குப்பைமேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.

ஒற்றைத் தலைவலி - எட்டி மரக்கொழுந்து , பூண்டு , மிளகு

எட்டி மரக்கொழுந்து

எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி போகும்.

  அறிகுறிகள்:
  1. தீராத ஒற்றைத் தலைவலி
  2. விடாத தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. எட்டி மரக்கொழுந்து.
  2. மிளகு
  3. பூண்டு.
செய்முறை:
  1. எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
  2. தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

புத்துணர்ச்சி பெற‌ - துளசி

துளசி

துளசி இலைகளை இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்)  இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருக புத்துணர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:
  1. அதிக சோம்பல்.
  2. தளர்ச்சி.
தேவையான பொருட்கள்:
  1. துளசி இலை
  2. தண்ணீர்.
செய்முறை:

ஒரு கையளவு துளசி இலைகளை  ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.

சளித் தொல்லை - ஆடாதொடா இலை , துளசி , தூதுவளை

தூதுவளை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  எடுத்து லேசாக  அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.

அறிகுறிகள்:
  1. மூச்சு விட முடியாமல் சோர்வு.
  2. சளி.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதொடா இலை
  2. வெற்றிலை
  3. துளசி
  4. தூதுவளை
  5. தேன்
செய்முறை:

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக  அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

தலை வலி நீங்க - மிளகு , உப்பு

மிளகு

உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி நீங்கும்.

அறிகுறிகள்:
  1. ஒரு பக்கமாக வலித்தல்.
  2. தலை பாரமாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. உப்பு
  2. மிளகு
செய்முறை:

உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.

தலை வலி குறைய - துளசி , மிளகு

துளசி

மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி குறையும் .

அறிகுறிகள்:
  1. தலை வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. மிளகு
  2. துளசி
செய்முறை:

மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

தலை வலி விலக - கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

அறிகுறிகள்:
  1. தலை பாரமாக இருத்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. கொத்தமல்லி சாறு
செய்முறை:

கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்
.

தலைபாரம் குறைய - தும்பை பூ , நல்லெண்ணெய்

தும்பை பூ

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றை தலை வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. தும்பை பூ
செய்முறை:

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தலைசுற்றல் நீங்க - ஏலக்காய் , பனைவெல்லம்

பனைவெல்லம்

ஏலக்காய்களை நசுக்கி தண்ணீரில் போட்டு  கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

அறிகுறிகள்:
  1. தலை சுற்றல்.
  2. மயக்கம்.
தேவையான பொருள்கள்:
  1. ஏலக்காய்
  2. பனைவெல்லம்
செய்முறை:

ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

தலைவலி நீங்க- ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றை தலை வலி.
தேவையான பொருள்கள்:
  1. ஜாதிக்காய்
செய்முறை:

ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

தலைவலி விலக - ஏலக்காய் , வெற்றிலைக்காம்பு , கிராம்பு

ஏலக்காய்

ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைக்காம்பு  ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
  2. ஒற்றை தலைவலி.

தேவையான பொருள்கள்:

  1. ஏலக்காய்
  2. கிராம்பு
  3. வெற்றிலைக்காம்பு
  4. பால்
செய்முறை:

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்
.

தலைவலி குறைய - இஞ்சி , நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து சேர்த்துக் காய்ச்சி தைலத்தை தலையில் தடவவும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றை தலை வலி.
தேவையான பொருள்கள்:
  1. இஞ்சி
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்கவும்.

தலைவலி நீங்க - நெல்லிக்காய் , குங்குமப்பூ , ரோஜா நீர்

ரோஜா நீர்

நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. தலை குத்துதல்.
தேவையான பொருள்கள்:
  1. நெல்லிக்காய்
  2. குங்குமப்பூ
  3. ரோஜா நீர்
செய்முறை:

நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

தலைவலி குணமாக - குங்குமப்பூ

குங்குமப்பூ

குங்குமப்பூவை அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
  2. ஒற்றை தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. குங்குமப்பூ
செய்முறை:

குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.

தலைவலி குறைய - எலுமிச்சைப் பழம் , மிளகு

எலுமிச்சைப் பழம்

எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

அறிகுறிகள்:
  1. தலைவலி
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சைப் பழம்
  2. மிளகு
செய்முறை:

எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

தலைசுற்றல் நிற்க - இஞ்சி , தேன்

தேன்

இஞ்சி சாறு, தேன் கலந்து சாப்பிட தலைசுற்றல் குணமாகும்.

அறிகுறிகள்:
  1. தலைசுற்றல்
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி
  2. தேன்
செய்முறை:

இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.

தலைபாரம் குறைய - வேப்பிலை , துளசி

வேப்பிலை
துளசி, வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.



அறிகுறிகள்:
  1. தலைபாரம்
தேவையான பொருட்கள்:
  1. வேப்பிலை
  2. துளசி
செய்முறை:

துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

தலை வலி குறைய - அகத்தி இலை

அகத்தி இலை

அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தடவினால் தலை வலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
தேவையான பொருட்கள்:
  1. அகத்தி இலை
செய்முறை:

அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.

தலைவலி குணமாக - கிராம்பு , பால் , உப்பு

உப்பு

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு
  2. உப்பு
  3. பால்
செய்முறை:

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில்  தடவினால் தலைவலி குறையும்.

தலை வலி குறைய - மிளகு , பால்

மிளகு

மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க  தலை வலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
தேவையான பொருட்கள்:
  1. மிளகு
  2. பால்
செய்முறை:

மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க  தலை வலி குறையும்.
Flag Counter